Latest Post

காஷ்மீர் விடுதலை போராளி - யாசின் மாலிக். மே 18 நினைவு நாளில் பங்க்கேற்ப்பு!

Written By DevendraKural on Saturday, 18 May 2013 | 08:19


பொலிஸ் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி நடைபெறும்: சீமான்

பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியினர் கடலூரில் முள்ளிவாய்க்கால் நினைவு தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தினை இன்று நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

இதற்கு தடை விதிக்க கடலூர் பொலிசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அதில் பேரணி நடத்த நீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து இன்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற இருந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் பொலிஸார் தடை விதித்துள்ளனர்.


இந்நிலையில் உள்ளரங்குக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்,
கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக ஓட்டுக் கேட்டு பல்வேறு கூட்டங்களை நடத்தினேன். அந்தக் கூட்டங்கள் நடந்த மேடைகளில் எல்லாம் பிரபாகரன் படத்தைப் போட்டிருந்தோம். அப்போது பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? இதுபோல் 2 ஆயிரத்துக்கும் அதிகமான கூட்டங்களில் நான் பேசியிருக்கிறேன். அந்தக் கூட்டங்களில் எல்லாம் பிரபாகரன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போதெல்லாம் என்ன கலவரமா வெடித்தது?
என் சொந்த மண்ணில் என் சொந்தங்கள் இறந்ததற்கு ஒப்பாரி வைக்கக் கூட இடமில்லையா. நாங்கள் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக வளர்ந்திருக்கிறோம். இதுபோன்ற அடக்குமுறைகளுக்கு எல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். மீண்டும் நீதிமன்றம் சென்று, தடையை அகற்றி, இதை விட பெரிய அளவில் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வோம் என்றார்.

தமிழ் இன அழிப்பில் வெளிவராத அதிர்ற்சி காட்சிகள்! மனதை இழக்கும் கண்ணீர்..

இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்-தமிழீழ விடுதலைப் புலிகள்


இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள். ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சி கொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/01/13
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/05/ 2013.
மே 18 – தமிழர் இனவழிப்பு நினைவு நாள் – 2013
அன்பான தமிழ்பேசும் மக்களே,
இன்று தமிழர் இனவழிப்பு நினைவுநாள்.
ஆண்டாண்டு காலமாக அன்னியப் படைகளாலும் இனவாத அரசாங்கங்களாலும் எமது இனத்தின்மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் குறியீடாகவும் எமது இனம் எழுச்சிகொள்ள வேண்டியதைச் சுட்டும் முரசறைவாகவும் இந்நாள் அமையப் பெறுகின்றது.
எமது இனத்தின் மீதான அடக்குமுறைகளிலும் அழிப்பு நடவடிக்கைகளிலும் அதியுச்சமாகக் கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுநாளே தமிழர் இனவழிப்பைச் சுட்டும் பொதுநாளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த கொடூரமான இனவழிப்பை நினைவு கொள்வதென்பது அவ்வடுக்களையும் கொடுமைகளையும் நினைத்து அழுது புலம்பிச் சோர்ந்து போய் அடங்கி விடுவதில் முடிந்து விடுதல் கூடாது. மாறாக இவற்றின் வலிகளை உணர்ந்து, எமது இனம் தொடர்ந்தும் இவ்வலிகளைச் சுமக்கவிடாமல் எமக்கான விடுதலையை விரைந்துபெற முனைப்புடன் செயற்பட ஊக்கப்படுத்தும் ஒருநாளாக அமைய வேண்டும்.
இன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னான நான்காம் ஆண்டை நினைவுகொள்கின்றோம். இக்காலப்பகுதியில் எண்ணற்ற துயரங்களை எமது இனம் கடந்துவந்துள்ளது. போர் முடிந்ததாக அறிவித்து நான்காண்டுகளாகியும் எமது மக்களின் இன்னல்கள் தீர்ந்தபாடில்லை. தொடர்ந்தும் அவர்கள் படையினரின் கெடுபிடிகளுக்குள்ளேயே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
எங்கு பார்த்தாலும் படையினரின் இருப்பே எமது தாயகத்தில் நிரம்பியுள்ளது. தமிழ்மக்களின் சிவில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் அனைத்திலும் படைத்தரப்பினரின் தலையீடு இருந்தவண்ணமேயுள்ளது. படையினருக்காக எமது மக்களின் இருப்பிடங்கள் அபகரிக்கப்படுகின்றன. படையினரின் துணையோடு எமது நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றன. ஒரு படையாட்சியே அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எமது மண்ணினதும் மக்களினதும் வளங்கள் அன்னியரால் சூறையாடப்படுகின்றன.
எமது மக்களைத் தொடர்ந்தும் அச்சநிலைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் வைத்திருக்கும் நோக்கோடு சிங்களப் பேரினவாத அரசு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. தற்போதும் மீன்பிடித்தலுக்கான கட்டுப்பாடு, போக்குவரத்துக் கட்டுப்பாடு என்பன தொடர்ந்த வண்ணமேயுள்ளன.
எமது மக்களின் ஜனநாயகக் குரல்கள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமாக தமது கருத்தைச் சொல்ல முடியாத அடக்குமுறைக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றார்கள். ஊடகங்களின் மீதான அடக்குமுறைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்றன. தமிழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அரச பயங்கரவாதத்தின் வன்மத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றது.
தனியே ஊடகங்கள் மீது மட்டுமன்றி அரசியல்வாதிகள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள், மதகுருக்கள் என்று அரசாங்கத்தை விமர்சிக்கும், நபர்கள் மீது அரசவன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு உட்பட்டு தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதுகூட வன்முறைகள் ஏவிவிடப்படுகின்றன. இந்நிலையில் சாதாரண மக்களுக்குரிய பாதுகாப்பை எவ்வாறு உறுதிப்படுத்துவது? போர் ஓய்ந்ததாகச் சொல்லப்பட்டபின் இந்த நான்காண்டு காலத்தில் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களுக்கான நியாயத்தை வழங்குவதற்குப் பதிலாக மென்மேலும் தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஒட்டுமொத்தமாகவே தமிழினத்தைக் கருவறுப்பதையே சிங்கள பெளத்த பேரினவாதம் செய்துகொண்டுள்ளது.
உலகத்துக்கு தன்னை நல்லபிள்ளையாகக் காட்ட சில திருகுதாளங்களை சிங்களப் பேரினவாத அரசு செய்துகொண்டுள்ளது. தமிழர்களைத் தமது படைகளில் சேர்ப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி தாம் தமிழர்களைச் சரிசமமாக நடாத்துவதாக உலகை ஏமாற்ற முனைகிறது. தமிழர்களுக்குரிய அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்து அவர்களுக்கான உரிமைகளை வழங்குவதே இனச்சிக்கலுக்கான தீர்வாக அமையுமேயன்றி படையில் தமிழர்களைச் சேர்ப்பது போன்ற நாடகங்கள் தீர்வாகா.
ஆயிரக்கணக்கில் எமது மக்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்டு, எம்மினம் வதைக்கப்பட்ட நாட்களின் ஆண்டு நினைவில் எமது இனம் துக்கித்திருக்கையில் மிகப்பெரும் போர் வெற்றிவிழாவை சிங்கள தேசம் கொண்டாடுவது என்பது உண்மையில் சிங்கள இனமானது நல்லிணக்கத்துக்குத் தயாரில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அத்தோடு இந்த வெற்றி மமதைக் களியாட்டமானது இலங்கைத்தீவு இணைய முடியா இரு தேசங்களைக் கொண்டுள்ளது என்பதையும் சுட்டுகின்றது.
சிங்கள அரசின் இந்தக் கொடூரமான முகத்தை சில பன்னாட்டு ஊடகங்கள் ஓரளவாவது வெளிக்கொண்டு வருகின்றன. சில மனிதவுரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக அரசின் அடக்குமுறைகளைப் பதிவு செய்து வருகின்றன. தன்னலமற்றுப் பணியாற்றும் இவ்வமைப்புக்களின் நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு ஓரளவு ஆறுதலளிக்கின்றன. அதேவேளை, பன்னாட்டு அரசுகள் சில தமது சொந்த நலன்களுக்காகவே சிறிலங்கா அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகித்தாலும்கூட, பேரினவாத அரசின் தமிழர் மீதான விரோதப்போக்கை ஓரளவாவது ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளன.
ஆனால் இந்த மாற்றத்துக்காக எமது இனம் கொடுத்த விலை மிகப்பெரியது. கடந்த காலத்தில் எமது குரல்களைச் செவிமடுக்காது பாராமுகமாக இருந்துவிட்டு இப்போது மெல்ல மெல்ல, அதுவும் அரைகுறையாகக் குரல்கொடுப்பது என்பது தமிழ்மக்கள் தொடர்பில் உலகம் இன்னமும் முழுமையாக நியாயத்தின்பால் செயற்படத் தொடங்கவில்லையென்பதையே உணர்த்தி நிற்கின்றது.
தமிழ்மக்கள் குறித்த கரிசனை மேலெழும்போதெல்லாம் விடுதலைப் புலிகள் அமைப்பைக் காரணம் காட்டியே எமது மக்களின் அவலங்களும் அபிலாசைகளும் முடக்கப்பட்டன. ஆனால் இந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்மக்களுக்கான நியாயத்தை வழங்க யார் தடைநிற்பதாக பன்னாட்டுச் சமூகம் சாட்டுச் சொல்லப் போகின்றது?
நியாயமற்ற முறையில் விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு எமது மக்களின் நியாயமான போராட்டத்தை நசுக்குவதில் குறியாக இருந்த உலகநாடுகளே எமது மக்களின் பாதுகாப்பற்ற தன்மைக்கும், இன்று அவர்கள் எதிர்கொள்கின்ற இனவழிப்புக்கும் பொறுப்புக்கூறக் கடமைப்பட்டுள்ளவர்கள். உருப்படியான ஒரு பாதுகாப்புப் பொறிமுறையைக்கூட எமது மக்கள்சார்ந்து ஏற்படுத்தாமல் வெறும் காகித அறிக்கை விட்டுக்கொண்டிருப்பது விளலுக்கு இறைத்த நீரே என்பதை உலகநாடுகள் உணரவேண்டும்.
சிங்களப் பேரினவாதத்தின் கோரக்கரங்களில் எமது மக்களைச் சரணாகதியாக்கி, மக்களை அழிப்பவர்களிடமே அவர்களின் பாதுகாப்பையும், குற்றச்செயல்களை விசாரிக்கும் பொறுப்பையும் கொடுத்துவிட்டு வாளாவிருக்கும் பன்னாட்டுச்சமூகம் மிகவிரைவில் விழித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் இனவழிப்பை நிறுத்தி உரிய தீர்வைத் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியைத் தொடங்க வேண்டும்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்திருந்த எமது மக்கள் படிப்படியாகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். மண் அபகரிப்புக்கு எதிராக தாயகத்தில் அறவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்தவண்ணமுள்ளன. தமிழகத்தில் மாணவர்களின் போராட்டங்கள் என்றுமில்லாத வகையில் புத்துணர்வோடு புதிய தடம் பதித்துள்ளன. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் எம்மினம் இன்றில்லை.
இனியும் காலந்தாழ்த்தாது பன்னாட்டுச் சமூகம் எமது மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர முயல வேண்டும். உரிய தீர்வை உரிய நேரத்தில் பெற்றுத்தர வகைசெய்யாவிடத்து நாம் தொடர்ந்தும் எமது போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு தெரிவில்லை.
அன்பான தமிழ்பேசும் மக்களே,
விடுதலைக்காக எத்தகைய அர்ப்பணிப்பையும் செய்யத் துணிந்த மக்கள் கூட்டத்தை எந்த அடக்குமுறைச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. அளவிட முடியாத அர்ப்பணிப்புக்களைப் புரிந்து போராடிய நாம் எமது இலட்சியத்தை அடையும் வரை ஓய்ந்துவிட முடியாது.
உலக அரங்கில் எமது நியாயமான போராட்டம் ஒருநாள் அங்கீகரிக்கப்படும். எமக்கான விடுதலை ஒருநாள் நிச்சயம் கிடைத்தே தீரும். அதுவரை ஓய்ந்துவிடாமல் போராடுவோம் என இந்நாளில் நாம் உறுதிபூணுவோம்.
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்.
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

ருவண்டா யுத்தம் - ஹோட்டல் ருவண்டா

Written By DevendraKural on Thursday, 16 May 2013 | 09:31


ருவண்டா யுத்தம் - ஹோட்டல் ருவண்டா- நிஜ ஹீரோ.Paul Rusesabagina.

சின்ன வயதில் படித்துக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சியில் செய்திகள் பார்ப்பது வழமை.. நாட்டு நடப்புகள்,உலக நடப்புகள், விளையாட்டுச்செய்திகளை தெரிந்து கொள்ளும் ஆர்வமே இதற்கு காரணம்.. இலங்கை ரூபவாஹினி அலைவரிசையில் மாலை 6.30 மணிக்கு தமிழ் செய்திகள் ஒளிபரப்பாகும்.. அதை தவறவிடுவதேயில்லை, அப்போதைய செய்திகளில் அடிக்கடி கேட்கப்பட்டு பழகிப்போன பெயர்தான் "ருவண்டா" காரணம் தினமும் கிரிக்கெட் ஸ்கோர் சொல்வது போல் இறந்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடுவார்கள்.. காட்சிகளில் காட்டுவார்கள்.. ருவண்டா என்ற பெயர் குறிப்பிடாத உல்க செய்திகளே கிடையாது எனலாம்.. அப்போதெல்லாம் அதன் காரண காரியங்களை ஆராயுமளவுக்கு அனுபவமோ அறிவோ இருந்ததில்லை..

கொஞ்ச காலத்திற்கு பின் அந்த செய்திகள் மறக்கடிக்கப்பட்டது.. மிக நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்த "ஹோட்டல் ருவண்டா" திரைப்படத்தை அண்மையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.. அதன் பிறகே ருவண்டா யுத்தத்தின் கொடூரங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தது..யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் தன் குடும்பத்தையும், அயலவர்களையும், குழந்தைகளையும்,வெளிநாட்டுக்காரர்களையும், எந்த இன மக்கள் தேடி தேடி கொல்லப்பட்டார்களோ அந்த இன மக்களில் கொஞ்சம் பேரையும்..மொத்தமாக 1200 பேர் அளவில், ஹோட்டல் மேனேஜராக பல சிக்கல்களுக்கு மத்தியில் தன் ஹோட்டலில் வைத்து காப்பாற்றிய ஒருவரின் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டதே இந்த திரைப்படம்..

    Hotel Rwanda' - The Mille Collines Hotel இங்கு வைத்துத்தான் ஆயிரத்துக்கதிகமானோர் காப்பாற்றப்பட்டனர்..
இதை திரைப்படம் என்று சொல்வதைவிட நிஜக்காட்சிகளின் தொகுப்பு என்றே சொல்லலாம்.. அவ்வளவு யதார்த்தம் யுத்தத்தின் கொடூரங்களை கண்முன்னே கொண்டு வருகிறது.. அதன் பதறறத்தை நொடிக்கு நொடி பதிவு செய்திருக்கிறது..
அந்த காட்சிகளை திரைப்படத்துக்கென்று படமாக்கினார்களா.. அல்லது யுத்தம் நடந்த காலப்பகுதியில் ஒழிந்து நின்று படமாக்கினார்களா என்ற சந்தேகம் படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரலாம்.  அவ்வளவு மக்களை ஒன்றினைத்து ஒரு நிஜமான யுத்தகளம் போன்ற பிண்னனியை உருவாக்கி இப்படியொரு படத்தை எப்படி இயக்க முடிந்தது என வியந்து கொண்டிருக்கிறேன் அந்த வகையில் இயக்குனர் Terry George  மற்றும் திரைக்கதையாசிரியர்கள் George and Keir Pearson பாராட்டுக்குரியவர்கள்..

ஐ.நா பாதுகாப்பு படைகள் வந்து தங்களை காப்பாற்றி அழைத்துச்செல்வார்கள் என எதிர்பார்த்திருக்கையில் ஐ.நா படைகள் வந்து வெளிநாட்டவர்களான வெள்ளைக்காரர்களை மற்றும் அழைத்துச்செல்கையில்.. செஞ்சிலுவைச்சங்க ஊழியர், மேனேஜரைப்பார்த்து நீங்களெல்லாம் ஆபிரிக்கர்கள் கறுப்பர்கள் அதனால்தான் உங்களை அவர்கள் காப்பாற்றவில்லை என சொல்லுமிடம்.. ஐ.நா வின் பாரபட்சகொள்கைகளின் யதார்த்தம்.. அதன் பின் காயப்பட்டு உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடி வருபவர்களை தன் ஹோட்டலுக்குள் அனுப்பி வைக்கும் காட்சி மனிதாபிமானத்தின் உச்சம்..இத்தனைக்கும் அந்த மேனேஜர் ஹுட்டு இனத்தை சேர்ந்தவர்.. அதாவது ருட்சி இனத்துகெதிராக இனவெறியாட்டத்தை நடத்திய இனத்தைசேர்ந்தவர்..

1990 ம் ஆண்டு முதல் சிறு சிறு சம்பவங்களாக நடைபெற்று வந்த உள்நாட்டுப்பிரச்சினை 1994 ம் ஆண்டே உக்கிரமடைந்தது.. 94 ம் ஆண்டு ஏப்ரல் 6 யில் ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana கொல்லப்படுகிறார்.. இவர் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தைச்சேர்ந்தவர் என்பதால் பெரும்பாண்மை ஹுட்டு இனத்தவர்களால் சிறுபாண்மை ருட்சி இனத்தவர்களுக்கெதிராக தொடக்கப்பட்டதே இந்த இனவெறியுடன் சேர்ந்த கொலவெறி..அதாவது 100 நாட்களுக்குள் மாத்திரம் 800,000 மக்கள் கொன்றொழிக்கப்படார்களாம். இது இன்நாட்டு மொத்த சனத்தொகையில் பத்தில் ஒரு பங்காகும்.. 
                                            ருவண்டா ஜனாதிபதி Juvénal Habyarimana

இரண்டாம் உலகப்போர் நடந்த காலப்பகுதியில் யூதர்களுக்கு எதிரான இனவழிப்பை நடத்திய நாஸிகளிடமிருந்து Oskar Schindler என்ற ஜேர்மன் தொழிலதிபர்.. ஆயிரக்கணக்கான யூதர்களை காப்பாற்றியதை பதிவு செய்த Schindler's List திரைப்படம் மூலம் யூதர்கள் மத்தியில் Oskar Schindler பெருமைக்குறியவராக மாற்றப்பட்டாரோ அந்த வகையில் இந்த ஹோட்டல் ருவண்டா திரைப்படம் மூலம் தன் உயிரை பெரிதாக மதிக்காமல் ஆயிரத்துக்கும் அதிகமானவர்களின் உயிரைக்காப்பாற்றிய அதன் நிஜ ஹீரோ Paul Rusesabagina உலகெங்கிலுமுள்ள மனிதாபிமானத்தை நேசிப்பவர்களினால் உயர்வாக பார்க்கப்படுவார் என்பதில் சந்தேகமில்லை..
நிஜ ஹீரோ Paul Rusesabagina

இந்த திரைப்படம் பார்க்கும்போது அந்த மேனேஜராக நடித்த ஹீரோ மீது ஒரு ஈர்ப்பும் அவரின் நடவடிக்கைகளை பாராட்டும் மனநிலையும் உருவாகமல் இருக்க வாய்ப்பில்லை.. இது ஒரு உண்மைச்சம்பவம் ஆனபடியால் அதன் நிஜ ஹீரோ யார் என தேடிப்பார்க்கும் ஆர்வமும் உங்களுக்கு உண்டாகலாம்.. அந்த ஆர்வம் எனக்கு ஏற்பட்டது அதன் விளைவே இந்தப்பதிவு. உண்மையில் அவர் ஒரு ஹீரோதான் யுத்தம் உக்கிரமடைந்த காலப்பகுதியில் ஹோட்டலை மூடச்சொல்லி கிளர்ச்சியாளர்களும் அரசாங்கப்படைகளும் மிரட்டிய போதிலும் அவர்களுக்கு காசு கொடுத்து சமாளித்து ஆயிரத்துக்கதிகமான மக்களை தன் ஹோட்டலுக்குள் மறைந்து வைத்து பலநாட்களுக்கு உணவு கொடுத்து காப்பாற்றியவர் இவர்..ஒரு முறையாவது இவரை நேரில் சந்தித்து இவரை பாராட்ட வேண்டும் என மனது விரும்புகிறது.. இப்போது பெல்ஜியத்தில் வசித்து வருகிறாராம்.. தன் மனைவி பிள்ளைகளுடன்.
நிஜ ஹீரோ திரைப்பட ஹீரோவுடன்
                              
மனிதனை மனிதன் வேட்டையாடும் இன்றைய கொடூர உலகில் இவ்வாறான மனித நேயமுள்ளவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்களே..

தமிழன்னைக்குச் சிலை?

பள்ளிகளில் தமிழை நீக்கி புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்குச் சிலை அமைப்பது இனிமேல் கண்காட்சியில் தான் தமிழைப் பார்க்க முடியும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது. தமிழன்னைக்கு சிலை, தமிழுக்குச் சிறை என்றல்லவா இப்போக்கு மாறிவிடும்.
அண்மையில் காலஞ்சென்ற தமிழறிஞரும் தமிழினப் போராளியு மான பாவலர் மு.வ.பரணர் அவர்களின் மகன் செல்வன் தமிழ்ப்பரிதிக்கும், செல்வி கவிதாவுக்கும் திருவெறும்பூரில்15.05.2013 அன்று பேராசிரியர் கு.திருமாறன் அவர்கள் தலைமையில் திருமணம் நடந்தது.
தமிழ் முறைப்படி திருமண நிகழ்வுகளை “செந்தமிழ் அந்தணர்” முதுமுனைவர் இளங்குமரனார் அவர்கள் நிகழ்த்தி வைத்தார்கள். உணர்ச்சிப்பாவலர் காசிஆனந்தன், சொல்லாய்வறிஞர் அருளியார்,தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், திருவாட்டி இறை.பொற்கொடி, திருவாட்டி தேன்மொழி அருளியார்,தமிழினச் செயல்பாட்டாளரும், பாவலர் பரணரின் வாழ்நாள் நண்பருமான திரு. செல்லத்துரை,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை,ம.தி.மு.க. தேர்தல் குழு உறுப்பினர் புலவர் க.முருகேசன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.தமிழ்க்கலை இலக்கியப் பேரவை திருச்சி செயலாளர் தோழர் இராசா ரகுநாதன் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், பேராசிரியர் க.நெடுஞ்செழியன், திருவாட்டி சக்குபாய் நெடுஞ்செழியன், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் அ.ஆனந்தன், தோழர் குழ.பால்ராசு, தோழர் பழ.இராசேந்திரன், திறனாய்வாளர் வீ.நா.சோமசுந்தரம், வழக்கறிஞர் த.பானுமதி, புலவர் இரத்தினவேலவர், த.தே.பொ.க.திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, தோழர் கவிபாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கும் போது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பின்வருமாறு பேசினார்:
பாவலர் மு.வ.பரணர் அவர்கள் காலமாகிவிட்டார், இத்தருணத்தில் அவர் நம்மோடு இல்லையே என்று கவலை வருவது இயல்பு. ஆனால் உண்மையில் கவலைப்பட வேண்டியதில்லை. நம் அனைவர் வடிவிலும் அவர் இருக்கிறார்.அவர் போய்விட்டார் என்ற எண்ணத்தைக் கைவிட்டு, அவர் கருத்துகள், அவர் வழிகாட்டல்கள்,நமக்கு அப்படியே இருக்கின்றன; அவற்றை நாம் செயல்படுத்தும் போது அவர் அச்செயல்பாடுகள் அனைத்திலும் இருப்பார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், “தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை;தமிழ்த் தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ?” என்று கேட்டார். அதே போல் தான், தமிழுக்கும்,தமிழினத்திற்கும் தொண்டு செய்த, பரணருக்குச் சாவில்லை.
திருவெறும்பூர் மிகுமின் தொழிலகத்தில் (BHEL) சிறந்த பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னரும், பல மாநிலங்களிலும், லிபியாவிலும் கொதிகலன்களை உருவாக்கும் போது பரணரை அழைத்து அவர் அறிவுரைப்படி செய்து வந்தார்கள். அவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், மொழிக்கும் இனத்துக்குமான போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1968ஆம் ஆண்டு, பாவாணர் அவர்களும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் திருச்சி தேவர் மன்றத்தில் நடத்திய, உலகத் தமிழ்க் கழகத்தின் முதல் மாநாட்டில்– அந்த அமைப்பின் நிறுவன மாநாட்டில் முக்கியக் களப்பணியாற்றியவர்களுள் பரணரும் ஒருவர் என்ற செய்தியை பிற்காலத்தில் அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன். நான் அம்மாநாட்டில் மாணவர் பேராளராகக் கலந்து கொண்டு உரையாற்றினேன் என்ற செய்தியையும் அவரிடம் சொன்னேன்.
1968இல் ஒருவர்க்கு ஒருவர் அறிமுகம் இல்லாமலே ஓர் இலட்சியத்தின் கீழ் ஒன்றாகச் சேர்ந்திருந்த நாங்கள் இரண்டாண்டுகளுக்கு முன்பு அந்த இலட்சியத்திற்கான அமைப்பிலும் ஒருங்கிணைந்தோம். இரண்டாண்டுகளுக்கு முன்பு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராகச் சேர்ந்தார் பாவலர் பரணர்.
தமிழுக்காக, வாழ்நாள் முழுவதும் பாடாற்றிய பாவலர் பரணர் இல்லத் திருமண விழாவில் வாழ்த்துரை வழங்கும் போது, இப்பொழுது தமிழுக்கு ஏற்பட்டிருக்கின்ற தீங்குகளை எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசின் தொடக்கப் பள்ளியில் இருந்து,மேல்நிலைப் பள்ளி வரை உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி வகுப்புகளில்தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள்.தமிழ்வழி வகுப்புகள் தாமாகவே காணமல் போய்விடும் அதாவது, தமிழைப் புறக்கணிக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை, மக்கள் வரிப்பணத்திலிருந்து தமிழக அரசே தொடங்க இருக்கிறது.
இதற்கு, தமிழ்வழி வகுப்புகளில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் மறுக்கிறார்கள், போதிய மாணவர் எண்ணிக்கை இல்லாததால் பள்ளிக் கூடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்று ஆட்சியாளர்கள் காரணம் சொல்கிறார்கள். இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குத் தமிழக அரசு, முயல வேண்டுமே தவிர, நம் தாய்மொழியாம் தமிழையே நீக்கிவிடும் திட்டத்தைத் தீட்டக் கூடாது.
ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவர் களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்தால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ் வழியில் பயில சேர்ப்பார்கள். கேரளா இப்படி ஒரு சட்டத்தை அண்மையில் கேரள அரசு இயற்றியுள்ளது.
அதைப் போல் ஒரு சட்டத்தைத் தமிழ்நாட்டில் தமிழக அரசு, தமிழக சட்டப் பேரவையில் இயற்ற வேண்டும். அடுத்ததாக, பள்ளிகளின் உள்கட்டுமானங்களை மேம்படுத்த வேண்டும்.தரமாகப் பாடம் சொல்லித் தருவதற்கான உறுதிப்பாட்டை உருவாக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யாமல் தமிழ்வழி வகுப்புகளைக் கைவிட்டுவிட்டு, ஆங்கில மயமாக்கும் கல்வி முறைக்குத் தாவக்கூடாது. இவ்வாறான தமிழ்மொழியை நீக்கிடும் கல்வி முறை பிரித்தானிய ஆட்சியில் கூட இல்லை.
100 கோடி ரூபாய் செலவில், தமிழன்னைக்குச் சிலையும் பூங்காவும் அமைக்கப் போவதாக, முதலமைச்சர் சட்ட ப்பேரவையில் அறிவித்துள்ளார். தமிழன்னைக்குச் சிலைக்கு அமைப்பதை நாம் வரவேற்கிறோம்.
ஆனால் பள்ளிகளில் தமிழை நீக்கி புறக்கணித்துவிட்டு தமிழன்னைக்குச் சிலை அமைப்பது இனிமேல் கண்காட்சியில் தான் தமிழைப் பார்க்க முடியும் என்று சொல்லாமல் சொல்வதுபோல் உள்ளது. தமிழன்னைக்கு சிலை, தமிழுக்குச் சிறை என்றல்லவா இப்போக்கு மாறிவிடும்.
தமிழக அரசின் பள்ளிகளில் தமிழைப் புறக்கணிக்கும் வகையில் ஆங்கில பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தைக் கைவிட்டு, ஒன்றாம் வகுப்பிலிருந்து, பன்னிரெண்டாம் வகுப்பு வரை, தமிழைக் கட்டாய மொழிப்பாடமாகவும்,கட்டாயப் பயிற்றுமொழியாகவும் ஆக்கிடும் திட்டத்தைச் செயல் படுத்துமாறும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சட்டம் இயற்றுமாறும் பாவலர் பரணர் இல்லத் திருமண விழா வாயிலாக தமிழக முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ் வழியில் படித்ததற்கான அடிப்படை அளவு கோலாக ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை தமிழைப் பாடமொழியாகவும்,பயிற்றுமொழியாகவும் கொண்டு படித்ததை நிபந்தனையாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடுவது எப்படி ?

Written By DevendraKural on Wednesday, 15 May 2013 | 07:30



பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் இயற்பியல்,வேதியியல் பாடங்களில் (இயல் அறிவியல் ) பெற்ற மதிப்பெண்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர எடுத்துக் கொள்வார்கள். கணிதப் பாடத்தில் 200 க்குபெற்ற மதிப்பெண்களை 100 க்கு மாற்றுவார்கள். (200/2 =100. அதே போல் இயற்பியல் பாட மதிப்பெண்களை 200 க்கு பெற்ற மதிப்பெண்களை 50 க்கு
மாற்றுவார்கள். (200/4=50 மதிப்பெண்கள்) இப்போது இந்த பாடங்களின் மொத்த மதிப்பெண்கள் கீழ்க்கண்டவாறு கணக்கிடுவார்கள்.

கணிதம் = 100 மதிப்பெண்கள்
இயற்பியல் = 50 மதிபெண்கள்
வேதியியல் = 50 மதிப்பெண்கள்
மொத்தம் = 200 மதிப்பெண்கள்

கவுன்சிலிங்கில் கலந்து கொள்வது எப்படி ?

பி.இ. படிப்புகளில் மாணவா;கள் கவுன்சிலிங்கில் (Counselling) Lகலந்து
கொண்ட பின்னர்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கவுன்சிலிங்
(Counselling)கலந்து கொள்ளும் போது நினைவில் கொள்ள வேண்டிய சில

குறிப்புகள்:

மாணவர் சேர்க்கை நடைபெறும்போதே என்ன பாடத்தில் எந்த
கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதை பெற்றோர், மாணவர் மற்றும்
வழிகாட்டும் ஆசிரியர்கள் உதவியுடன் சிறப்பாக முடிவெடுக்க உதவுகின்ற வகையில்
கவுன்சிலிங் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில்
மாணவர்களை கவுன்சிலிங்கிற்கு அழைப்பார்கள். பிளஸ் 2 தேர்வில் கணிதம்
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்களை 200க்கு மாற்றி
மதிப்பெண்கள் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்களுடன் பெற்றோர் அல்லது
உறவினர் அல்லது நண்பர்கள் யாரேனும் ஒருவரை உடன் அழைத்து வரவேண்டும்.

ஏற்கனவே மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல் புத்தகம் மற்றும் கல்லூரி
தொகுப்பு புத்தகம் ஆகியவற்றிலுள்ள தகவல்களை கூர்ந்து படித்து எந்தக்
கல்லூரியில் சேர்வது என முன்கூட்டியே முடிவு எடுத்துக் கொள்வது நல்லது.


ஒரு கல்லூரியின் தரத்தை எளிதில் இனம் கண்டுகொள்வது எப்படி?
எந்தக் கல்லூரியில் உங்கள் பிள்ளையை சேர்க்க விரும்புகிறிர்களோ, அந்தக்
கல்லூரிக்கு உங்கள் பிள்ளையை அழைத்துச் செல்லுங்கள். அந்தப் பொறியியல்
கல்லூரியில் மூன்றாம் ஆண்டு நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்களை கல்லூரி
நேரத்திற்கு பிறகு தனியாக அழைத்து கல்லூரியை பற்றிய விபரம் கேளுங்கள்.
அங்கு வசூலிக்கப்படும் கல்விகட்டணங்கள், நன்கொடைகள் பற்றியும்
தெரிந்துக்கொள்ளுங்கள். அவர்கள் பெரும்பாலோர் சொல்லும் கருத்து நீங்கள்
சரியான முடிவு எடுக்க உதவியாக இருக்கும். அந்தக் கல்லூரியில்
ஆசிரியர்களையும் சந்தித்து விவரம் தெரிந்துக் கொள்ளுங்கள். கல்லூரியில்
போதுமான வசதிகளுடன் ஆய்வுக்கூடம் உள்ளதா? வகுப்பறை வசதி உள்ளதா என்பதை
அறிந்துக் கொள்ளுங்கள். இவை கல்லூரியை பற்றி அறிந்து கொள்ள நிச்சயம்
உதவும்.

"ஒவ்வொரு கல்லூரிக்குப் போய் அது எப்படி இருக்கிறது
என்று பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா? செலவாகுமே?'' என சில பெற்றோர்கள்
எண்ணலாம். ஒரு மாணவர் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து பட்டம்
பெறுவதற்கு குறைந்தது 2 இலட்சம் ரூபாய் செலவாகிறது. 2 இலட்ச ரூபாயை
கல்விக்காக செலவழிக்கும் முன்பு கல்வி நிறுவனங்கள் பற்றி சேகரிக்க
இரண்டாயிரம் ரூபாய் செலவழித்தால் என்ன? செலவழிப்பது ஒன்றும் தப்பில்லையே.

கவுன்சிலிங்கில் கலந்து கொள்பவர்கள், ஒரு நாளைக்கு முன்பே கவுன்சிலிங்
நடக்கும் இடத்திற்கு செல்வது நல்லது. ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்தில்
அழைக்கும்போது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள இது உதவும். குறிப்பாக எந்தக்
கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் இன்னும் எவ்வளவு இடங்கள் காலியாக
இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கவுன்சிலிங்கிற்கு
செல்பவர்கள் கண்டிப்பாக சாதிச் சான்றிதழ் (Community Certificate)கொண்டு
செல்ல வேண்டும். விண்ணப்பத்தில் குறிப்பிட்டப்படி உரிய தொகைக்கான வங்கி
டிராப்டையும் கொண்டு செல்ல வேண்டும்.

கவுன்சிலிங்கில் கலந்து
பின்பு எந்தக் கல்லூரியில் சேர வேண்டும் என்று முடிவு செய்த பின்பு அங்கு
அதற்கான அத்தாட்சி கடிதம் தருவார்கள்.ஒரு தடவை முடிவு செய்த பின்பு மற்ற
கல்லூரிக்கு மாற்ற முடியாது. எனவே தீவிரமாக ஆலோசனை செய்து முடிவு எடுப்பதே
நல்லது.

முதல் தலைமுறை மாணவர்களுக்குச் சலுகை

Written By DevendraKural on Monday, 13 May 2013 | 08:32


தமிழகத்தில்  எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்., பி.இ. ஆகிய தொழில் படிப்புகளில் சேரும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் (முதல் தலைமுறை) பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் விலக்கு அளித்து வருகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்புகளில் ஆண்டுக் கட்டணத்தில்தான் கல்விக் கட்டணம் இடம்பெறுவதால், கல்விக் கட்டணத்துக்கு மட்டுமே முழு விலக்குச் சலுகை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.10,495. இந்தக் கட்டணத்தில் கல்விக் கட்டணம் ரூ.4,000-த்துக்கு மட்டும் முதல் தலைமுறை மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை ரூ.6,495-ஐ முதல் தலைமுறை தகுதி மாணவர்கள் செலுத்தியாக வேண்டும்.
இதேபோன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். அல்லது அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேரும் முதல் தலைமுறை தகுதியைப் பெறும் மாணவர்கள் ஆண்டுக் கட்டணம் ரூ.2.5 லட்சமாக இருக்கும் நிலையில், கல்விக் கட்டணம் ரூ.1.25 லட்சத்தைச் செலுத்தத் தேவையில்லை.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கான அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் இடத்துக்கான முழுச்சலுகைக்கான கல்விக் கட்டண விவரம் சுயநிதி கல்லூரிகளின் பெயருடன் விண்ணப்ப தகவல் தொகுப்பேட்டில் அச்சிடப்படுகிறது. அதிலிருந்து கல்விக் கட்டணச் சலுகையை முதல்தலைமுறை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வி ஆண்டில் (2010-11) ஏற்றுக் கொள்ளப்பட்ட 17,610 விண்ணப்பங்களில், முதல் தலைமுறை (குடும்பத்தில் முதல் பட்டதாரி) சலுகையைப் பெற விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 6,440. இவர்களில் மருத்துவக் கல்லூரி அனுமதி கிடைத்து எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தோருக்கு கல்விக் கட்டணம் ரூ.4,000 சலுகை அளிக்கப்பட்டது.
ஒரு குடும்பத்தில் முதல் முறையாக பட்டப்படிப்பை படிக்க வரும் மாணவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த சலுகையை அரசு வழங்கியுள்ளது. அதன்படி, விவசாயக் குடும்பத்தில் இருந்தோ, கூலித் தொழிலாளியின் குடும்பத்தில் இருந்தோ முதல் முறையாக தொழில் கல்வியில் பட்டப்படிப்பை படிக்க வரும் மாணவ, மாணவியர், இந்த சலுகையை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்!

Written By DevendraKural on Saturday, 27 April 2013 | 00:47


இதோ இங்கே ஒரு பள்ளிக்கூடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுக் கிடக்கிறது. இது நடந்தது ஈழத்தில் அல்ல. இடித்தவர்கள் சிங்களர்களும் அல்ல! சென்னை பள்ளிக்கரணையில் நடைபெற்று வரும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு 19.07.2005ல் நேர்ந்த கதிதான் இது.
பள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி கொள்ளையடிக்கத் துடிக்கும் பணவெறி பிடித்த இராமசாமியும், மாஃபியா கும்பலும் பணத்துக்கு விலை போகும் அரசு அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்திய பயங்கரவாதம்தான் இது.
பள்ளியை இடித்த பயங்கரவாதக் கும்பலை ஊரே திரண்டெழுந்து விரட்டியடித்து மீண்டும் பள்ளியை கட்டியது;
மக்களின் வியர்வையாலும், சமூக அக்கறையுடையவர்களின் ஆதரவாலும், முற்போக்கு அரசியல் இயக்கங்களின் துணையாலும் எழுந்துநிற்கும் பாவாணர் பள்ளியை மீண்டும் தகர்த்துவிட துடிக்கின்றனர் சமூகவிரோதிகள். 19.07.2005ல் நடத்தப்பட்ட அதே சதிச்செயல்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளன.
இனியும் பொறுப்பதற்கில்லை; இதற்கு முடிவு கட்டாமல் ஓயப்போவதில்லை எனும் அடிப்படை யில் மக்களோடு சமூக - ஜனநாயக - அரசியல் அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து பாவாணர் பள்ளியைப் பாதுகாப்போம்!
பாவாணர் தமிழ்வழிப் பள்ளியின் நோக்கமும் வரலாறும்
மக்கள் வாழும் இடங்களிலேயே பள்ளிகளை அமைப்பதுதான், பயனும் பாதுகாப்புமானது. ஆனால் பள்ளிகளை நெடுந்தொலைவில் வைத்து மாணவர்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதால் விபத்துகள் ஏற்பட்டு பிஞ்சுகள் உயிரை விடுவது வாடிக்கையாகிவிட்டது. சொந்தமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் அறிஞர்களை உருவாக்கும். மனப்பாடம் செய்யச்சொல்லி மாணவர்களை வதைப்பதும், மதிப்பெண் எடுக்கும் எந்திரங்களாக அவர்களை மாற்றுவதும் என இயற்கைக்கு மாறான நிலையில் சீரழிந்து விட்டது இன்றைய கல்வி.
இத்தகைய சூழலில் மாணவர்களின் சிந்தனைத்திறனை பாதுகாக்கும் நோக்கோடுதான் தமிழ்வழிப் பள்ளிகளை நடத்தும் பணி ஒரு இயக்கமாக தமிழ்நாட்டில் தொடங்கியது. அருகமைப் பள்ளி, அறிவியல் கல்வி, தாய்மொழிக் கல்வி, அடக்குமுறை இல்லா கல்வியே இதன் நோக்கம்.
இந்த சமூகப் பணியை முதன்மையாக்கியே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியும் தொடங்கப்பட் டது. கடந்த 14 ஆண்டுகளாக பலநூறு மாணவர்கள் இப்பள்ளியில் தொடக்கக் கல்வியை பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் திறனை இப்போது படித்துக் கொண்டிருக்கும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பத்தாவது தேர்வில் 400க்கு மேலும், பன்னிரெண்டாவது தேர்வில் 1000க்கு மேலும் மதிப் பெண்கள் எடுத்து தமக்கும், தாம் படித்த பாவாணர் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
பள்ளி வளாகத்திற்குள் வருவோரை “வணக்கம்” கூறி வரவேற்பதும், விடைபெறும்போது “நன்றி, மீண்டும் சந்திப்போம்” என வழியனுப்புவதும் என மிகச்சிறந்த பண்பாட்டின் அடையா ளமாகத் திகழ்கின்றனர் இம்மாணவர்கள்.
பாவாணர் பள்ளியின் ஆண்டுவிழாக்களில் அப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்தும் நடனம், நாடகம், பாடல்கள், எழுச்சிமிக்கதாகும். அவர்க ளின் பன்முகத்திறன் வளர்ச்சியை அறிந்த சமூக ஆர்வலர்கள் சனநாயக அரங்குகளிலும், சீர் திருத்த மணவிழாக்களிலும் தமிழக அளவில் இப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்ந்துள்ளனர்.
பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை அழிக்கத் துடிக்கும் நிலக்கொள்ளையர்கள்
பாவாணர் பள்ளி அமைந்துள்ள பள்ளிக்கரணை அஷ்டலட்சுமி லே-அவுட் 1985ல் அனுமதிபெற்று அமைக்கப்பட்டுள்ளது. எல்லா குடியிருப்புகளுக்குமான விதிமுறைகள் இதற்கும் பொருந்தும். லே-அவுட் விதிமுறைகளின்படி 20% சாலைகளுக்கும், 10% பள்ளி, பூங்கா ஆகிய சமூகப் பயன்பாட்டுக்கும், 10% அஞ்சல கம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கும் ஒதுக்க வேண்டும். இப்படி ஒதுக்கப்படுவது நிலவிற்ப னையாளர்களுக்கு இழப்பு அல்ல; மாறாக எல்லா வசதிகளும் உள்ளன என்ற அடிப்படையில் லே-அவுட்டில் உள்ள வீட்டுமனைகளை பல மடங்கு லாபத்திற்கும் விற்கின்றனர். அஷ்டலட்சுமி லே-அவுட்டும் இவ்வாறு லாபத்தில் விற்கப்பட்டதே. பொதுப்பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட (அஞ்சலம், காவல்நிலையம், தொலைபேசிநிலையம்) 10% இடங்களை அரசு முறையாக பயன்படுத்த வில்லை எனக்கூறி இராமசாமி வகையறாக்கள் விற்றுவிட்டனர்.
அன்று அரசு அதிகாரிகள் அந்த நிலத்தை கையகப்படுத்தாமல் போனதனால் இன்று அரசுக்கும் மக்களுக்கும் தேவையான அஞ்சல் நிலையம், காவல்நிலையம் முதலானவை வாடகைக் கட்டடத்தில் இயங்கிவருகின்றன. மக்களின் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது பாருங்கள்!
இப்படி பொது இடங்களை விற்று ருசிபார்த்து விட்ட கொள்ளைக்கும்பலுக்கு பள்ளிக்கான இடத் தையும் விற்றுவிட வேண்டும் என அடங்காத பணவெறி. ஆனால் நினைத்த மாத்திரத்தில் பள்ளிக்கான இடத்தை விற்க முடியாது. பள்ளிக்கூடம் கண்டிப்பாக தொடங்கவேண்டும். தொடர்ந்து நடத்த முடியவில்லையென்று சிறிது காலம் கழித்து அரசை ஏமாற்ற வேண்டும். எனவே இராமசாமி, பேருக்காக ஒரு பள்ளியை தொடங்குகிறார். அதை அவரது பினாமியான உறவினர் இரங்கநாதன் மூலம் தொடங்குகிறார். 1993ஆம் ஆண்டு ‘இந்து வித்யாலயா’ என்ற பேரில் ஒரு ஆங்கிலப்பள்ளியை தொடங்கி ஓரிரு ஆண்டுகளிலேயே நடத்த முடியாமல் மூடியும் விடுகிறார்.
‘இந்து வித்யாலயா’ என்ற அப்பள்ளி மூடப்பட்டு நான்காண்டுகள் கழித்து, 1999இல்தான் பாவாணர் பள்ளி நிர்வாகம் அந்த இடத்தை வாடகைக்கு கேட்டது. பள்ளி இடத்தை வீட்டு மனையாக மாற்றி விற்கும் வரை வாடகை வருவதை ஏன் இழக்கவேண்டும் என்ற காரணத்தால் இராமசாமியும் ஒத்துக்கொண்டார். 10 ஆயிரம் ரூபாய் முன்பணமும், மாதம் 1000 ரூபாய் வாடகையும் பேசி பாவாணர் பள்ளியை நடத்த அனுமதித்தார். முறையாக வாடகையும் பெற்றுக் கொண்டு வந்தார்.
5 இலட்சம் ரூபாய் செலவு செய்து புதர் மண்டிக்கிடந்த அந்த இடத்தையும், பள்ளி கட்ட டத்தையும் புனரமைத்தது, பாவாணர் அறக்கட் டளை நிர்வாகம் இத்தொகை மக்களிடமிருந்தும், பள்ளி நிர்வாகத்தின் கையிருப்பில் இருந்தும் செலவு செய்யப்பட்டது. இதையடுத்து பள்ளியின் கல்வித்தரம், பண்பாடு, ஒழுக்கங்கள் காரணமாக மாணவர் எண்ணிக்கையும் பெருகியது. ஒவ் வொரு ஆண்டும் மாணவர் - பெற்றோர் மற்றும் சமூக அக்கறையுடையோர் பங்களிப்பில் ஆண்டு விழா வெகுச்சிறப்பாக நடைபெற்று பள்ளியின் புகழ் பரவத் தொடங்கியது.
பள்ளி சீராக இயங்கிக் கொண்டிருந்த இச்சூழலில், அஷ்டலஷ்மி லே-அவுட் எங்கும் வீடுகள் எழுந்து மக்கள் பயன்பாடு அதிகரித்தது. கூடவே வீட்டுமனை விலையும் அதிகரித்தது. தாங்கள் ஓய்வு பெறுவதற்குள் பள்ளி இடத்தை வீட்டுமனையாக்கி விற்று காரியத்தை சாதித்துக் கொள்ள நினைத்த சில அதிகாரிகள் இராமசாமியிடம் திட்டத்தைக் கூறினர்.
பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டு மனையாக மாற்ற முடியாது என்றாலும், லே-அவுட் போட்டு 19 ஆண்டுகள் ஆகியும் யாரும் அந்த இடத்தில் பள்ளி நடத்த முன்வரவில்லை என்று பொய் சொல்லி வீட்டுமனையாக மாற்றத் திட்டம் வகுத்தனர். அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துக் காரியத்தைச் சாதிக்கலாம் என காய்களை நகர்த்தினர்.
‘பள்ளி நடத்த யாரும் முன்வரவில்லை’ என்று காட்டவேண்டுமானால் அந்த இடத்தில் பள்ளி நடக்கக் கூடாது. ஆனால் பாவாணர் தமிழ்வழிப் பள்ளி நடக்கிறதே; அதுவும் மக்கள் செல்வாக் கோடு நடக்கிறதே; என்ன செய்வதென்று யோசித்தனர். அந்த இடத்தில் பாவாணர் பள்ளியை நடக்க விட்டால்தானே இந்தச் சிக்கல். பள்ளியை காலிசெய்து விரட்டிவிட்டால் அல்லது இடித்துத் தரைமட்டமாக்கி விட்டால் திட்டத்தை எளிதாக சாதித்துவிடலாம் என குறுக்குவழியைத் தேடினர்.
இராமசாமி வேட்டியை மடித்துக்கொண்டு கோதாவில் இறங்கினார். 2004ஆம் ஆண்டு பள்ளியில் மாணவர்கள் இறுதித்தேர்வை நெருங்கும் நேரமான பிப்ரவரியில் பள்ளிக்குள் நுழைந்த இராமசாமி, உடனே பள்ளியை காலி செய்யும்படி பாவாணர் பள்ளி நிர்வாகத்தை மிரட்டினார்.
“ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளியை அருகாமையிலேயே மாற்ற வேண்டும் என்றால் அதற்கு வாய்ப்பான இடம் வேண்டும்; அதற்கான அவகாசம் வேண்டும்” என்று இராமசாமியிடம் பாவாணர் பள்ளி நிர்வாகம் கோரியது. மாணவர் களின் தேர்வு, கல்வி, எதிர்காலம், பள்ளியின் நிலைமை குறித்து பள்ளி நிர்வாகத்தினர் பலவாறு விளக்கினர். அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத இராமசாமி, “எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை. உடனடியாக பள்ளியைக் காலி செய்யுங்கள்” என்று நாள்தோறும் மிரட்டினார்.
பள்ளியை கைப்பற்ற ரவுடிகளை ஏவிய இராமசாமி
இராமசாமியின் தொடர்ச்சியான மிரட்டலால், என்ன செய்வதென்று யோசித்தனர் பள்ளி நிர்வாகத்தினர். பாவாணர் பள்ளி நிர்வாகம் குறிப்பிட்ட இடத்தில் தாங்கள் பள்ளி நடத்துவதையும், பள்ளிக்குள்ள ஆபத்தையும் விளக்கி சென்னை உயர்நீதிமன்றத்தில் 10.03.2004இல் வழக்கு தாக்கல் செய்தது. இதனை ஏற்று நீதிமன்றம் சட்டத்திற்கு புறம்பாக பாவாணர் பள்ளியை காலி செய்யக் கூடாதென 14.06.2004இல் ஆணை வழங்கியது.
பள்ளிக்குச் சார்பாக நீதிமன்ற ஆணை கிடைத்த காரணத்தால், அரசியல்வாதிகள் சிலரை நாடினார் இராமசாமி. அவர்கள் இராமசாமிக்கு நேரடியாகத் துணைசெய்ய முடியாது என்று சொல்லிவிட்டு, மறைமுகமாகத் துணைசெய்தனர். அடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்யும் சில தாதாக்களை அணுகினார். அவர்கள் அறக்கட்டளை நிர்வாகிகளையும், பள்ளி ஆசிரியர்களையும் மிரட்டிப் பார்த்தனர். அவர்களிடம், இது பணம் சம்பாதிப்பதற்காக நடத்தப்படும் பள்ளி அல்ல. பொதுநல நோக்கோடு நடத்தப்படும் தாய்மொழிப் பள்ளி. இதில் நீங்கள் தலையிட்டால் மக்கள் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்பை சந்திக்க நேரிடும். அதன்பிறகு அவர்களில் சிலர் அதைப்புரிந்து கொண்டு விலகிக் கொண்டனர்.
சிலர் மட்டும் தொடர்ந்து மிரட்டியதால், முறைப்படி, 16.03. 2004ல் பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தினர் புகார் அளித்தனர். நடவடிக்கை இல்லை. மேலும் மிரட்டல் அதிகரித் தது. அதனால் மீண்டும் 6.05.2004இல் பள்ளி நிர்வாகம் புகார் அளித்தது. புகாரின் மேல் நடவடிக்கை எடுக்காததால், 07.05.2004இல் தமிழக முதல்வர், மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை இயக்குநர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் புகார் அனுப்பியது. புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
பெற்றோர்களும், பகுதிவாழ் நல்லிதயம் கொண்டவர்களும், சமூக அக்கறையுடைய இயக் கங்களும் ஒத்துழைத்து பாவாணர் பள்ளிக்குத் துணைநின்றனர். இதனால் எல்லா ஆபத்துகளையும் எதிர்கொண்டு பள்ளி இயங்கிவந்தது.
தாதாக்களைக் கொண்டு மிரட்டி பணிய வைக்க முடியாததால், அப்போதைய பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் வீரமணியை நாடியது இராமசாமி கும்பல். தாதாக்களால் முடியாத ‘காரியத்தை நான் நிறைவேற்றிக் காட்டுகிறேன்’ என்று முண்டா தட்டினார் வீரமணி.
பள்ளி நிர்வாகத்தினரை அழைத்து, பள்ளியைக் காலி செய்யச் சொல்லி மிரட்டினார். நீதி மன்றத்தில் வழக்கு இருக்கிறது. சிவில் வழக்கில் காவல்துறை தலையிடக்கூடாது என்று சொன்ன பிறகும், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு காவலர் களை அனுப்பித் தொந்தரவு கொடுத்தார்.
நீதிமன்றத்தை ஏமாற்றி காவல்துறை துணையுடன் பள்ளியை தரைமட்டமாக்கிய கொடூரம்
ஏதாவது ஒரு நீதிமன்ற ஆணை இருந்தால், பள்ளியைக் காலி செய்து விடலாம் என்று எண் ணிய இராமசாமி, மோசடியான ஒரு வேலையை செய்தார். பாவாணர் பள்ளி நடக்கும் இடத்தில் இராமசாமியின் உறவினர் இரங்கநாதன் இன்னமும் ‘இந்து வித்யாலயா’வை நடத்தி வருவதாகவும், அதனை இடிக்க சதி நடப்பதாகவும், பள்ளிக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் படியும் 28.04.2004இல் இரங்கநாதனின் பேரில் வழக்குப் பதிவு செய்தார். இப்படி நடக்காத ஒரு பள்ளிக்கூடத்தின் பேரில் பொய்யான வழக்குப்போட்டு, இல்லாத பள்ளிக்கு ‘காவல்துறை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்’ என்று ஆணையும் பெற்றார்.
பள்ளியை இடிப்பதற்கு திட்டமிட்ட சதிகள் நடந்த அன்று பகல் 12 மணிக்கு சில அரசியல்வாதிகளை வைத்து மிரட்டி, பள்ளியை மூடச் செய்வதற்காக மாவட்டத் தொடக்க கல்வி அலுவலரை பள்ளிக்கு அழைத்து வந்துள்ளார் இராமசாமி. பள்ளி சிறப்பாக நடைபெற்ற காரணத்தால் பள்ளியை மூடச் சொல்லாமல் சென்றுவிட்டார் கல்வி அலுவலர்.
கல்வி அதிகாரியை வைத்து பள்ளியை மூட முடியாத காரணத்தால், காவல்துறை ஆய்வாளர் வீரமணியை அணுகினார் இராமசாமி. அன்று மாலை 3 மணிக்கு பள்ளிக்கரணை தலைமைக் காவலர் (I.S.) இராஜ்குமார் பள்ளிக்குள் வந்தார். பள்ளியைப் பற்றித் தகவல் சேகரிக்க வந்ததாக பதிவேட்டில் பதிவு செய்தார். (பள்ளியை இடிப்ப தற்கு முன் நோட்டமிடுவதற்காகத்தான் அவர் வந்திருந்தார் என்பது பின்னர்தான் தெரிந்தது.)
இதன்பிறகு மாலை பள்ளிக்கரணை ஆய்வாளர் வீரமணி 25 காவலர்களுடனும், இராம சாமியும், இரங்கநாதனும் 40 அடியாட்களுடனும் திமுதிமுவென பள்ளிக்குள் புகுந்து, பள்ளியின் மேசை, நாற்காலி, பள்ளிக்கான பதிவேடுகள் அனைத்தையும் அள்ளி டெம்போவில் ஏற்றியுள்ளனர். தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியர் தமிழ்க்கண்மணி மற்றும் சில ஆசிரியர், சில குழந்தைகளைப் பிடித்துத் தள்ளி தாக்கியுள்ளனர்.
அன்றைய ஆய்வாளர் வீரமணி கையில் ஒரு காகிதத்தை வைத்துக்கொண்டு இது பள்ளியை இடிப்பதற்கான நீதிமன்ற ஆணையென கொக்க ரித்தார். அதை பார்வையிட ஆசிரியர்கள் கேட்டபோது தரமுடியாது எனத் திமிராகப் பதிலளித்தார். அனைவரும் திகைத்து நிற்கும்போது பள்ளியை பின்னாலிருந்து ஜேசிபி எந்திரத்தைக் கொண்டு இடிக்கத் தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்குழந்தைகள் ஓலமிட்டனர்; குழந்தைகளின் பெற்றோர்கள் ஓடிவந்தனர். ஊர்மக்களும் சமூக ஆர்வலர்களும் கூடிவிட்டதைக் கண்டு பதறிய ஆய்வாளர் வீரமணிக்கு உதறல் எடுத்து விட்டது. நீதிமன்ற ஆணையை காட்டச்சொல்லி கேட்ட மக்கள், அவர் கொடுக்காததால் அவரது கையிலிருந்து பிடுங்கிப் பார்த்தனர்.
அந்த ஆணை பள்ளியை இடிப்பதற்கானதல்ல; பள்ளிக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கானது என்று அறிந்த மக்கள் கொந்தளித்தனர்; ரவுடிகளும், இராமசாமியும், இரங்கநாதனும் ஓட்டம் பிடித்தனர்.
ஆய்வாளர் வீரமணி உள்ளிட்ட காவல்துறையினரை மக்கள் சிறைப்பிடித்தனர். ஜேசிபி எந்தி ரம் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. ஊடகங்கள் எல்லாம் நடந்த அநீதியை பதிவு செய்தன. உடனே மடிப்பாக்கம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் (ASP) மகேந்திர ரத்தோர் ஓடிவந்தார். தவறு நடந்துவிட்டதென மக்களிடம் சமாதானம் கூறினார்.
காவல்துறையை கண்டிப்பது போல் காட்டிக் கொண்டார். இடிக்கப்பட்ட கட்டடத்தை கட்டித்தர ஏற்பாடு செய்வதாகக் கூறினார். ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
இப்படி, இல்லாத ‘இந்து வித்யாலயா பள்ளி’ யின் பெயரில் வழக்குப்பதிவு செய்து நீதிமன் றத்தை ஏமாற்றியது மட்டுமல்லாமல், இல்லாத பள்ளிக்கு பாதுகாப்பு கொடுக்கச் சொல்லி ஆணை பெற்று, இருக்கின்ற பாவாணர் பள்ளியை இடித்து ஒரு மிகப்பெரிய பயங்கரவாதச் செயலைச் செய்துள்ளனர் பணவெறி பிடித்த இராமசாமி கும்பல். அந்தக் கும்பலுக்கு முழு உடந்தையாக இருந்திருக்கிறார் அன்றைய காவல் துறை ஆய்வாளர் வீரமணி.
பள்ளி இடிக்கப்பட்டாலும் மக்கள் இடிந்து போகவில்லை. போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
மக்களின் இடைவிடாத போராட்டமும், கிடைக்காத நீதியும்
பள்ளி இடிக்கப்பட்ட 19.07.2005 அன்று இரவே மடிப்பாக்கம் ஏ.எஸ்.பி., கிண்டி டி.சி., தாமஸ்மலை ஜே.சி, மாநகர காவல்துறை ஆணையர், தமிழக முதல்வர் ஆகியோருக்கு தந்தி வழி புகார் அளிக்கப்பட்டது.
எந்த பதிலும் இல்லை. ஆனால் நீதிகேட்டு மறுநாள் சாலைமறியல் செய்த மாணவர்களின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
21.07.2005இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, செங்கல்பட்டு மாவட்ட நீதிபதி, ஆலந்தூர் மாவட்ட நீதிபதிகளுக்கும் தந்தி அனுப்பப்பட்டது.
23.07.2005இல் தமிழக முதல்வர், மனித உரிமைகள் ஆணையம், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு புகார் அனுப்பப்பட்டது.
புகாரின் மீது நடவடிக்கை இல்லையென உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. புகாரே கிடைக்கவில்லையென காவல்துறை நீதி மன்றத்தில் கூறியது. நீதிமன்ற பரிந்துரையின்படி மறுபடியும் புகார் கொடுக்கப்பட்டது. அதற்கும் இன்றுவரை நடவடிக்கை இல்லை.
காவல்நிலையத்துக்கும், நீதிமன்றத்துக்கும் அலைந்தும் இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. ஆனால் சமூகவிரோதிகளை விரட்டியடித்து விட்டு பாவாணர் பள்ளி அதே இடத்தில் செயல்படுகிறது. அதற்குக் காரணம் பள்ளிக்கரணை மக்களும், சமூக ஆர்வலர்களும் தரும் இடைவிடாத ஆதரவும் அன்புமே.
கொடியவர்கள் இடித்த பள்ளியை துணிச்சலுடன் தூக்கி நிறுத்திய மக்கள்
பள்ளி இடிக்கப்பட்ட பிறகு அடுத்தது என்ன செய்வது என்று பள்ளி நிர்வாகம் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், “வெட்டவெளியாக இருந்தாலும் பரவாயில்லை, எங்களுக்குப் பாடம் நடத்துங்கள்” என மாணவர்கள் கேட்டனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளியைப் போன்ற முன்மாதிரிப் பள்ளி அருகில் எங்கும் இல்லை என்பதால் எங்கள் குழந்தைகளுக்கு நீங்களே தொடர்ந்து கல்வி சொல்லிக் கொடுங்கள்” என்று பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர்கள் முறையிட்டனர். பெற்றோர்களும் பொதுமக்களும் நிதி திரட்டி பள்ளியை மீண்டும் கட்ட உதவினர். இடிக்கப்பட்ட அதே இடத்தில் 2 மாதத்திற்குள் மீண்டும் பள்ளி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு இதோ எட்டாண்டுகள் ஓடிவிட்டது. மொத்தத்தில் 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.
அதேநேரத்தில் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த பயங்கரவாதிகள் மீண்டும் பழையபடி ஏதாவது செய்யலாமா என கூட்டுச்சதியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், காவல் துறையினரின் உதவியை நாடுகின்றனர். அன்றே பள்ளியை இடித்த பயங்கரவாதிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று மறுபடியும் சதிச்செயலில் ஈடுபட அவர்களுக்கு துணிவு வந்திருக்குமா?
அன்று மக்களுக்கும் சனநாயக சக்திகளுக் கும் அவர்களின் சதிச்செயல் தெரியாமல் போனதால் அவர்களால் பள்ளியை இடிக்க முடிந்தது. இன்றோ எந்த சதிச்செயல் செய்தாலும் அதை முறியடிக்கும் ஆற்றலை பெற்றோர்களும் பொதுமக்களும், பள்ளி நிர்வாகத்தினரும் பெற்றுள்ளனர்.
நமது ஒற்றுமையையும் பள்ளிக்கான ஆதரவையும் வெளிக்காட்டும் விதமாக பாவாணர் பள்ளியை பாதுகாக்க மக்களும், மக்களுக்கான இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும், குடியிருப்போர் சங்கத்தினரும் இணைந்து களம் இறங்கி உள்ளோம்.
இலங்கை இனவெறி இராஜபக்சே அரசு, தமிழீழத்தில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, அவர்களின் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் குண்டுவீசி தரைமட்டமாக்கியதற்கு போராடுகிற நாம், நம் கண்ணெதிரே பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை இடித்துத் தரைமட்டமாக்கிய பணவெறி பிடித்த இராமசாமி கும்பலுக்கு எதிராகவும் போராடுவோம்!
இப்போராட்டம்,
 பள்ளியை நடத்துவதற்கான உரிமைப்போராட்டம்!
 பள்ளி இடம் பள்ளி நடத்துவதற்கு மட்டுமே என்பதற்கான போராட்டம்!
 அரசு விதிகளுக்குப் புறம்பாக பள்ளி மனையை வீட்டுமனையாக்க எவருக்கும் உரிமையில்லை என்பதற்கான போராட்டம்!
 பணவெறி பிடித்த குற்றவாளி இராமசாமிக்கு துணைநிற்பதை காவல்துறையும், அரசு அதிகாரிகளும் கைவிட வேண்டும் என்பதற்கான போராட்டம்!
 பள்ளியை இடித்து, தொடர்ந்து சதிச்செயல்களில் ஈடுபடும் இராமசாமியை உடனே கைதுசெய்ய வேண்டும் என்பதற்கான போராட்டம்!
 பள்ளியை நடத்தும் தகுதியும் உரிமையும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு இப்போதும் இருக்கிறது என்பதற்கான போராட்டம்.!
 குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை மக்கள் போராட்டங்கள்  தொடரும்!
காவல்துறையே!
 பாவாணர் பள்ளியை இடித்த பணவெறி பிடித்த இராமசாமி கும்பலை உடனே கைது செய்!
தமிழக அரசே!
 பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் நடத்தப்படும் பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பாதுகாப்பு கொடு!
 பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை வீட்டுமனையாக மாற்றும் முயற்சியை தடை செய்!
பள்ளி தொடங்கப்பட்டு இதுவரை 13 ஆண்டு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டு விழாக்களில் சிறப்பு விருந்தினர்களாக தாமரை பெருஞ்சித்திரனார், பேராசிரியர் மா.நன்னன், பேராசிரியர் வசந்த கந்தசாமி, வலம்புரி ஜான், திரைப் பட நடிகர் சூர்யா, திரைப்பட இயக்குநர் கௌதம் மேனன், புஷ்பவனம் குப்புசாமி, ஐஏஎஸ் அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, பேராசிரியர் இறையனார், பழ.நெடுமாறன், இந்நாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் அந்நாளில் வழக்குரைஞராக இருந்தவருமான அரிபரந்தாமன், தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், பத்திரிகையாளர் அய்ய நாதன், திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளியை சிறப்பித்துள்ளனர்
பள்ளியின் வழக்குநிலைமை
16.3.2004 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு இடைக்காலத் தடையாணை பெறப்பட்டது. பின்னர் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. அதன்படி, ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் பள்ளி அறக்கட்டளை சார்பில் 2 உரிமையியல் வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதன்பிறகு, இராமசாமி தரப்பில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதால், ஆலந்தூரில் பள்ளி சார்பில் தொடுக்கப்பட்ட 2 வழக்குகள் மற்றும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் “இரங்கநாதன் பேரில் தொடுக்கப்பட்ட போலிவழக்கு” ஆகிய மூன்று வழக்குகளும் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் அவ்வழக்குகள் அனைத்தும் தாம்பரம் சார்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு இப்பொழுது நடைபெற்று வருகின்றன.
இராமசாமி தொடுத்துள்ள வழக்கில் பாவாணர் பள்ளி நிர்வாகத்தினர் அத்துமீறி நுழைந்து பள்ளி நடத்துவதாகவும், அவர்களை காலி செய்து கொடுக்கவேண்டும் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றப் போவதாகவும் கூறியுள்ளார். பாவாணர் பள்ளி தரப்பில் தாங்கள் முறைப்படியான வாடகைதாரர் என்றும், பள்ளி இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதற்காக தங்கள் பள்ளிக்கட்டடத்தை இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டனர் என்றும், தங்களை முறைப்படியான வாடகைதாரர் என்று அறிவிக்க வேண்டும் என்றும், பள்ளியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது.
அஷ்டலஷ்மி அவென்யூ பகுதி மக்களின் கருத்து
பள்ளி, பூங்கா, பொதுப்பயன்பாட்டுக் கான நிலங்கள் ஒதுக்கப்பட்ட லே-அவுட் என்பதனால்தான் அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் அதிக விலை கொடுத்து வீட்டுமனை வாங்கியுள் ளோம். பொதுப்பயன்பாட்டுக்கான நிலத்தை வீட்டுமனையாக மாற்றி விற்றுவிட்டனர். இப்போது பள்ளிக்கான இடத்தையும் வீட்டுமனையாக மாற்ற முயற்சிக்கின்றனர். இது அஷ்டலஷ்மி அவென்யூ லே-அவுட்டில் இடம் வாங்கியுள்ள மக்களை ஏமாற்றுகின்ற செயல் எனவும், பள்ளிக்கான இடத்தை வீட்டுமனையாக மாற்றுவதை கடுமை யாக எதிர்ப்போம் என அஷ்டலஷ்மி அவென்யூ பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். பாவாணர் தமிழ்வழிப் பள்ளிக்கு பொருளாதார வழியிலும், அறவழியிலும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பாவாணர் தமிழ்வழிப் பள்ளியை பாதுகாப்போம்! மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
இடம் : பள்ளிக்கரணை மாமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் (முன்னாள் பேரூராட்சி மன்ற அலுவலகம் எதிரில்)
நாள் : 27.04.2013 சனிக்கிழமை     மாலை 6 மணி.
தலைமை: திரு. சிவ.காளிதாசன், பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்
கண்டன உரை:
திரு. பழ. நெடுமாறன் தமிழர் தேசிய இயக்கம்
திரு. சி.மகேந்திரன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
திரு. த.வெள்ளையன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை
திரு. பாலவாக்கம் க.சோமு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
திரு. வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திரு. வேல்முருகன் தமிழர் வாழ்வுரிமைக் கட்சி
திரு. O.U. ரஹமத்துல்லா மனிதநேய மக்கள் கட்சி
திரு. சிதம்பரநாதன் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ,ம.வி) தமிழ்நாடு.
திரு. தமிழ்நேயன் தமிழ்த் தேச மக்கள் கட்சி
திரு. திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்
திரு. தங்க.தமிழ்வேலன் தமிழ்நாடு மக்கள் கட்சி
திரு. அய்யநாதன் நாம் தமிழர் கட்சி
திரு. தாமரை திரைப்படப் பாடலாசிரியர்
திரு. க.அருணபாரதி தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
திரு. தமிழழகன் தமிழ்த் தேச குடியரசு இயக்கம்
திரு. D. இராமன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
திரு. சங்கரசுப்பு உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்
திரு. பா.புகழேந்தி தமிழக மக்கள் உரிமைக் கழகம்
திரு. செந்தில் சேவ் தமிழ்ஸ்
திரு.திருமூர்த்தி திராவிடர் விடுதலைக் கழகம்
திரு. குமாரதேவன் தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திரு.டாக்டர் ஆ.இர.இராமசாமி இராவணன் நிறுவனம்
திரு. வேலுமணி தமிழர் எழுச்சி இயக்கம்
திரு. ஜெயப்பிரகாசு நாராயணன் தமிழர் குடியரசு முன்னணி
திரு. ராஜா திருநாவுக்கரசு தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு
திரு. இரா.பன்னீர்தாஸ் 199வது வட்ட மாமன்ற உறுப்பினர்
பேராசிரியர் திருமாவளவன்
திரு. அங்கயற்கண்ணி உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
திரு. அரணமுறுவல் உலகத் தமிழ்க் கழகம்
திரு. பி.டி.சண்முகம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ)
திரு. ஜெ.கங்காதரன் தமிழகத் தமிழாசிரியர் கழகம்.
திரு. மு.நடராசன் புரட்சியாளர் எழுச்சி இயக்கம்
திரு. குணத்தொகையன் தென்மொழி அவையம்
திரு. மா.சேகர் அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்
திரு. சுடரொளி ஆசிரியர்
திரு. வீ.இறையழகன் மறைமலையடிகள் மன்றம்
திரு. வெற்றிச்செழியன் தமிழ்வழிக் கல்விக் கழகம்
திரு. பொ.மாயவன் மண்மொழி இதழ்-ஆசிரியர் குழு
திரு. கா.விஜயன் பாவாணர் பள்ளி பெற்றோர் கழகத் தலைவர்
திரு. பா.அமுதன் முன்னாள் மாணவர்-பாவணர் தமிழ்வழிப் பள்ளி
திரு. அ.மாரியப்பன்- செ.அனுராதா பாவாணர் பள்ளி பெற்றோர் கழக முன்னாள் பொறுப்பாளர்கள்
நன்றியுரை: திரு. குணா, பாவாணர் தமிழ்வழிப் பள்ளி பாதுகாப்பு கூட்டியக்கம்
தொடர்புக்கு : குணா - 9486641586, சிவ.காளிதாசன் - 8682854822,
ஜெயப்பிரகாசு நாராயணன் - 9840878819, குழல் - 9710204514
தோழர்களே!
தமிழ்ச்சமூகத்தின் எதிர்காலத் தூண்களை உருவாக்கும் இப்போராட்டத்திற்கு தாங்கள் நிதியுதவி அளித்துத் துணை நிற்கும்படித் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நிதி உதவி அளிக்க வங்கி கணக்கு எண்:
State Bank of India
SB Account No.: 31266037798
டி.சுப்ரமணியன்
வேளச்சேரி பை பாஸ் ரோடு கிளை

"மீண்டெழும் பாண்டியர் வரலாறு " புத்தக வெளியீட்டு விழா

Written By DevendraKural on Tuesday, 23 April 2013 | 19:50

*மீண்டெழும் பாண்டியர் வரலாறு*


வீரபாண்டிய ளகட்டபொம்மன், போன்ற போலி பாண்டியர்களின் வரலாறு உடைகிறது.
**********-***********

புகைப்படம்உலகின் முதல் மாந்தன் தோன்றிய இடமாக வரலாற்று அறிஞர்களால் கருதப்படும் லெமூரிய கண்டம் என்றழைக்கப்படும் குமரி கண்டத்தை கடல் கொண்ட போது பல்லாயிர கணக்கான பாண்டிய குல மக்களை பாதுகாப்பாக நாவலந்தீவு என்றழைக்கப்படும் இன்றைய இந்தியாவில் குடியேற்றிய அன்றைய பெருமைமிகு பாண்டியரின் இன்றைய நேரடி வாரிசுகள் யார்? என்று தடம் பிடித்து காட்டும் "மீண்டெழும் பாண்டியர் வரலாறு" என்ற நூல் தமிழரிஞர் தமிழ்திரு.செந்தில்மள்ளர் அவர்களின் ஏழாண்டு கால கடும் உழைப்பில் பாண்டியர்களின் இன்றைய வாரிசுகளை அடையாள காணும் நோக்கத்தில்
1)சங்க இலக்கியங்கள்
2)கல்வெட்டுக்கள்
3)செப்புபட்டையங்கள்
4)பள்ளு இலக்கியங்கள்
5)நாட்டுப்புற பாடல்கள்
6)தமிழகத்தில் பழம்பெரும் கோயில்களில்(பழனி, மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் முதலிய) உள்ள உரிமைகள்
7)பாண்டியர் தம் மக்களின் நிலப்பத்திர ஆவணங்கள், பாண்டியராசா கோயில் வழிபாடு
8)"பாண்டியன்" பெயர் தாங்கிய(சுந்தரபாண்டியபுரம், விக்கிரபாண்டியபுரம், பராக்கியபாண்டியபுரம் முதலிய) ஊர்களில் வாழும் பாண்டிய மக்கள்
9)கோவை பொன்னேர் பூட்டும் விழா, இராஜபாளைய வெண்குடை திருவிழா, சித்திரா பௌர்ணமி அன்று இந்திர விழா போன்ற விழாக்களில் உள்ள பாண்டியர் தடங்கள்
10)திரு.சுப்பையா பாண்டியர் அவர்களால் 1924 ல் தமிழ்நாட்டின் முதல் முதலில் தொடங்கப்பட்ட பாண்டியர் சங்க ஆவணம்
மேலும் இந்தியா முழுவதும் மேற்க்கொண்ட நேரடி கள ஆய்வின் விளைவாக யாவரும் ஏற்கும் வண்ணம் உருவாகியுள்ளது.

பாண்டியர் தம் மக்களை பற்றி பேசும் இந்நூலினை தமிழர் வரலாற்று ஆய்வு நிறுவனம் ஏப்ரல் 28. 2013 அன்று விழுதுநகர் மாவட்டம் சாத்தூரில் முனைவர் குருசாமி சித்தர் அவர்களின் தலைமையில் வெளியிட உள்ளது.

இந்நூலின் உண்மை தன்மையை கருத்தில் கொண்டு இந்நூலின் முதல் பிரதியை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வெளியிடுகிறார்.
மேலும் இந்நூல் தமிழ் சாதிகளுக்கிடையே உள்ள தொப்பூழ் கொடி இரத்த உறவை சான்றுகளுடன் விளக்குவதால் இந்நூலின் தற்க்கால முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ் சமுக தலைவர்களான
1)எழுகதிர் ஆசிரியர்- முனைவர் அருகோ நாடார்.
2)தமிழர்களம்-அரிமாவளவன் மீனவர்.
3)இனமான இயக்குனர்- மணிவண்ணன் கள்ளர்.
4)புதுக்கோட்டை பாவாணர் செட்டியார்.
5)பேராசிரியர் தீரன் வன்னியர்.
6)தோழர் தன்மானன்.
7)அறிவர் குணா பறையனார்.
8)கொங்கு வேளாள இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு கவுண்டர் M.L.A.
9)தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வன்னியர் Ex M.L.A
10)ஈழ புரட்சி கவிஞர் காசி ஆனந்தன் கரையாளர்
போன்ற அறிவார்ந்த பெருமக்கள் மற்றும் தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்.


திராவிடத்தால் வீழ்ந்தோம்
தமிழரியத்தால் எழுவோம்
என்ற சிந்தனையுடன் சாத்தூரில் அணிவகுப்போம் தமிழ் தேசத்தை மீண்டெடுப்போம் வாரீர்.




நெகிழவைத்த நாயகணின் வறுமை -சார்லஸ் டிக்கன்ஸ்.


“கொடிது​கொடிது வறு​மை ​கொடிது
அதனினும் ​கொடிது இள​மையில் வறு​மை”
என்பர். ஆமாங்க. வறு​மை வரலாம். ஆனால் இள​மையில மட்டும் வரக்கூடாதும்பாங்க. ஏன்னா அந்த இள​மைக் காலம்தான் நாம் வளரக்கூடிய காலகட்டம்.
அப்படிப்பட்ட ​கொடிய வறு​மையில சிக்கித் தவித்தவர்தான் ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ். இள​மையில் வறு​மையின் பிடியில் சிக்கிப் பள்ளிப் படிப்​பைப் பாதியில் நிறுத்திக் குடும்ப வறு​​மையி​னைப் ​போக்க உ​​ழைத்தவர்தான் சார்லஸ் டிக்கன்ஸ். ஆம்! அவர்தான் வறு​மை​யைப் படிக்கற்களாக மாற்றியவர் ஆவார்.
நாம் எத்த​னை​யோ புத்தகங்க​ளைப் படித்திருக்கி​றோம். ஆனால் அ​வை​யெல்லாம் நம் மனதில் நி​​லைத்து நிற்பதில்​லை. சில புத்தகங்க​ளைப் படித்திருப்​போம். அது அப்படி​யே மனதில் நி​றைந்து இருக்கும். ​​தொடர்ந்து நாம் அந்தப் புத்தகத்​தைத் திரும்பத் திரும்பப் படித்துச் சு​வைத்துக் ​கொண்​டே இருப்​போம். அவ்வாறு படித்தாலும் நமக்கு அலுப்பு ஏற்படாது. அ​தைப்​போன்ற புத்தகங்களில் ஒன்றுதான் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ என்ற க​தைப் புத்தகம்.
​மேல்நிலைப்பள்ளியில் நாம் படிக்கின்றபோது ஆங்கில பாடத்தில் இடம்​பெற்ற ‘ Oliver Twist ‘ என்ற நாவலை மறந்திருக்க முடியாது. குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதிலேயே குழந்தைத் தொழிலாளியாக மாறிய ஒரு சிறுவன் படும் துன்பங்க​ளைச் சித்திரிக்கும் ஓர் அற்புத நாவல் அது. அந்த நாவலாசிரியர் தனது சொந்த அனுபவங்களை எழுதியிருப்பதுதான் அந்த நாவல் மன​தைக் கவருகின்ற வ​கையில் அமைந்ததற்கு முக்கிய காரணம் ஆகும்.  அக்க​தையில் இடம்​பெறும் ‘ஆலிவர் ட்விஸ்ட்’ என்ற அந்த கதாபாத்திரம் இன்றளவும் நமது மன​தைவிட்டு அகலாத, நம்முள் வாழ்ந்து ​கொண்டிருக்கக் கூடிய பாத்திரமாக அ​மைந்துள்ளது. இந்த நாவ​லை எழுதியவர் யாருன்னு ​தெரியுமாங்க.. அவருதான் சார்லஸ் டிக்கன்ஸ்.
FILE PHOTO - Charles Dickens Museum Re-Opens: A Look Back At Charles Dickensபொதுவாக கற்பனைக் கதைகளைக் காட்டிலும் அனுபவக் கதைகளுக்கு வீரியமும், மன​தை உருக்கக் கூ​டிய தன்​மையும் அதிகமாக இருக்கும். அவ்வாறு வீரியமிக்க பல இலக்கிய படைப்புகளைத் தந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் உலகபுகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியர்தான் சார்லஸ் டிக்கென்ஸ் ஆவார்.
ஆங்கில இலக்கிய உலகம் ஷேக்ஸ்பியருக்கு அடுத்த இரண்டாவது உயர்ந்த நிலையை சார்லஸ் டிக்கன்ஸூக்குத் தந்திருக்கிறது. இத்த​கைய சார்லஸ் டிக்கென்ஸ்  1812-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி இங்கிலாந்தின் Portsmouth என்ற இடத்தில் பிறந்தார். அவரது குடும்பம் ஏழ்மையான வறு​மை வாய்ப்பட்ட குடும்பம். அவரது தந்தை ஜான் டிக்கென்ஸ் கப்பலில் ஓர் எழுத்தராகப் பணிபுரிந்தார்.  அவர் ஆடம்பரமாகச் ​செலவு ​செய்யும் பழக்கமுள்ளவர். கடன் வாங்கியும் அவர் ​செலவு ​செய்வார். அ​தைப்பற்றி சிறிதும் ​யோசிக்கமாட்டார்.
இவ்வாறு வரவுக்கு மீறி செலவு செய்யும் பழக்கம் அவருக்கு இருந்ததால் கடன் அதிகம் ஏற்பட்டது. அவரால் வாங்கிய கடன்க​ளைத் திருப்பிச் ​செலுத்த முடியவில்​லை. அவருக்குக் கடன் ​கொடுத்தவர்கள் கட​னைக் ​கேட்டுத் ​தொல்​லைகள் ​கொடுத்தனர். ​கொடுத்த பணம் வராததால் அவ​ரைச் சி​றைச்சா​லைக்கு அனுப்பினர். குடும்பத்​தை நிர்க்கதியில் விட்டுவிட்டு டிக்கன்ஸின் தந்​தை சி​றைக்குச் ​சென்றார்.
அப்போது சார்லஸ் டிக்கென்ஸ்க்கு பன்னிரெண்டு வயது. அதுவரை பள்ளியில் நன்கு பாடம் படித்து வந்த சார்லஸ்க்கு அதன்பிறகு கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.  வறு​மையின் பிடியில் சிக்கிய டிக்கன்ஸ் வறு​மை​யை விரட்ட தாம் விரும்பிப் படித்துப் பாதுகாத்து வந்த கதைப் புத்தகங்களையும், படுக்கையையும்கூட விற்றுப் பணம் சேர்க்க ​வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
தந்தை சிறைக்குச் சென்றவுடன் சார்லஸை, அவரது அன்​னையார் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்தார். பள்ளிக்கூடம் ​சென்று படிப்பதில் சார்லஸூக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் வறு​மை அவரது படிப்பிற்கு முற்றுப் புள்ளி ​வைத்தது. சார்லஸ்க்கு குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு வந்ததால் வேறு வழியின்றி படிப்​பைக் ​கைவிட்டுத் ​தொழிற்சா​லையில் பணியில் ​சேர்ந்து வேலை செய்தார். அப்போது அவருக்குக் கிடைத்த சம்பளம் வாரத்திற்கு ஆறு சிலிங்குகள் (Shillings) .  என்ன ​கொடு​மை பாத்தீங்களா? வறு​மை சிறுவன் சார்லஸின் படிப்​பை​யே பாழாக்கிடுச்சு.
அந்தத் தொழிற்சாலையில் சார்லஸ் வேலை செய்தபோது மிகுந்த துன்பங்க​ளை அனுபவித்தார். எலிகள் நிறைந்த ஒரு பழைய கட்டடத்தில் அந்த தொழிற்சாலை அமைந்திருந்தது. சின்னஞ் சிறிய நெஞ்சங்களில் காயங்களை ஏற்படுத்தும் அளவுக்கு அங்கு வாழ்க்கை சிரமமாக இருந்தது. அக்கசப்பான நிகழ்வுகள் அவரது ​நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்தன. அந்தப் பிஞ்சு வயதில் தான் பட்ட இன்னல்க​ளை எல்லாம் நி​னைத்து நி​னைத்து சார்லஸ் டிக்கன்ஸ் பின்னாளில் நிறைய எழுதினார். அப்படி அவர் எழுதிய பிரபலமான நாவல்தான் நான் ​மே​லே குறிப்பிட்ட ‘Oliver Twist’ எனும் சிறந்த நாவலாகும்.
டிக்கன்ஸூக்கு ​வே​லையில் மனம் ​செல்லவில்​லை. பள்ளிக்குச் ​செல்வ​தை​யே அவரது மனம் விரும்பியது. அவரது உள்ளத்துள் ​போராட்டம் ஏற்பட்டது. ​வே​லைபார்ப்பதா? அல்லது படிப்பதா? மனம் குழம்பித் தவித்தது. இவ்வாறு ​போராட்டத்துட​னே​யே அவரது ​வே​லை ​தொடர்ந்தது. சில மாதங்களுக்குப் பிறகு அவர் அந்த வேலையை விட்டு விட்டுப் படிப்பதற்காக மீண்டும் பள்ளியில் சேர்ந்தார். சிறு வயதிலேயே கதைகள் எழுதுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. புதிய பள்ளியில் அவர் சிறிய கதைகளை எழுதி தன் நண்பர்களிடம் காட்டுவார். பள்ளியில் மொழி ​தொடர்பான ​செயல்களுக்கு அவர் மாணவர் தலைவரானார். மிகுந்த இன்னல்களுக்கு இ​டையில் டிக்கன்ஸ் ஒருவழியாகப் பள்ளிப்படிப்​பை முடித்தார்.
சார்லஸ் பள்ளிப் படிப்​பை முடித்தவுடன் தனது பதினைந்தாவது வயதில் ஒரு சட்ட நிறுவனத்தில் எழுத்தராகப் பணிக்குச் சேர்ந்து சட்ட நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். பிறகு The Morning Chronicle, Mirror of Parliament, Joe son போன்ற செய்தித்தாள்களில் நிருபராக பணிபுரிந்தார். நாடாளுமன்ற நிருபராகவும் சார்லஸ் சிலகாலம் பணிபுரிந்தார். 1837-ஆம் ஆண்டு முதல் 1839 வரை The Pickwick Papers என்ற தலைப்பில் ஒரு சஞ்சிகையில் தொடர் கட்டுரைகளை எழுதினார். அந்தக் கட்டுரைகள் அவருக்கு பெரும் புகழைத் தேடித் தந்தன.
ஆங்கில உலகில் அடுத்த வார இதழ் எப்போது வரும் என்று பலரை எதிர்பார்க்க வைத்த முதல் எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்தான். அதன் பிறகு அவரது எழுத்துலக வாழ்க்கை ஒளிநி​றைந்ததாக மாறியது. டிக்கன்ஸ்  முழுநேர நாவலாசிரியானார்.  Oliver Twist, Nicholas Nickleby, Barnaby Rudge, A Christmas Carol, Martin Chuzzlewit, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations போன்ற புகழ்பெற்ற சமூக மற்றும் வரலாற்று நாவல்களை அவர் எழுதினார்.
ஆங்கில இலக்கிய உலகில் ஷேக்ஸ்பியரை தவிர்த்து நினைவில் நிற்கும் பல உன்னத கதாபாத்திரங்களை உருவாக்கியவர் சார்லஸ் டிக்கென்ஸ் மட்டுமே எனலாம். தாம் வாழ்வில் அனுபவித்த துன்பமயமான தருணங்க​ளைக்        க​தைகளாக்கினார் சார்லஸ். இப்ப​டைப்புகள்  அ​னைத்தும் மக்களின் மனங்கவர்ந்த காவியங்களாகத் திகழ்ந்தன. அழியாக் காவியங்களாகிய சார்லஸ் டிக்கென்ஸின் படைப்புகள் ஆங்கில இலக்கிய உலகின் உன்னதமான கருவூலங்களாகக் கருதப்படுகின்றன.
விறுவிறுப்பான கதை​யோட்டமும், சுவாரசியமான நகைச்சுவையும், தரமான வசனநடையும், உயிரோட்டமுள்ள கதாபாத்திர அமைப்பும் சார்லஸ் டிக்கென்ஸ் எழுத்தின் பலங்கள். எளியவர்களின் மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் துயரங்களை அவர் உள்ளது உள்ளவா​றே எடுத்துக்கூறுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். அதனால்தான் அவ​ரை அனைத்தரப்பினரும் விரும்பினர். மக்கள் சார்லஸ் டிக்கன்​ஸை ​போற்றிக் ​கொண்டாடினர்.
சார்லஸ் டிக்கன்ஸ் எழுத்துலகில் பிரபலமடைந்ததும் தம் நூல்களை அறிமுகப்படுத்த பல நாடுகளுக்கு பயணம் செய்தார். 1842-ல் கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும் சென்ற அவர் அங்கு அனைத்துலக பதிப்புரிமைக்காகக் குரல் கொடுத்தார். அமெரிக்காவில் அடிமைத்தலையை அகற்றுவதற்கும் அவர் குரல் கொடுத்தார்.
சார்லஸ் டிக்கன்ஸ் தமது 38-ஆவது வயதில் Household Words என்ற வாரப்பத்திரிகையைத் தொடங்கி அதன் ஆசிரியராகச் செயல்பட்டார். ஒன்பது ஆண்டுகள் கழித்து All the Year Round என்ற மற்றொரு பத்திரிகையைத் தொடங்கி இறக்கும் வரை அதன் ஆசிரியராக இருந்தார். 1865- ஆம் ஆண்டு சார்லஸ் டிக்கன்ஸுக்கு ​போதாத காலமாக அ​மைந்தது. அவ்வாணடில் அவர் பாரீஸுக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டிருந்த போது கடுமையான இரயில் விபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிக்கொண்ட சார்லஸ் டிக்கன்ஸ் அந்த விபத்தில் உடல் வலிமை குன்றிப்போனார்.   அவரது உடல் வலி​மை இழந்தது. இருப்பினும் அவற்​றை​யெல்லாம் அவர் ​பொருட்படுத்தாது தமது புத்தகங்களை அறிமுகப்படுத்துவதற்காக அமெரிக்கா சென்றார். அவருக்கு அது வெற்றிகரமான பயணமாக அமைந்தாலும் அவரது உடல்நிலை ​மேலும் மோசமானது.
உடல் பலவீனம​டைந்ததால் ​நோய் அவ​ரை வாட்டியது. இறப்பு        அ​வரை அ​ணைக்க அ​ழைக்க 1870-ஆம் ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி தமது 58-ஆவது வயதில் இவ்வுலகை விட்டு விடைபெற்றுக்கொண்டார்.  இலக்கியத் தாய் தனது தவப்புதல்வ​னை இழந்தாள். இலக்கியச் சு​வைஞர்கள் தங்களது மனங்கவர்ந்த எழுத்தாளர் இறந்த​தை எண்ணி மனம் வருந்தியழுதனர்.  தான் இறந்தபிறகு தனது உடல் சாதாரண இடுகாட்டில்தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார் டிக்கன்ஸ். ஆனால் அவரது விருப்பத்திற்கு மாறாக அவரது உடல் புகழ்பெற்ற Westminster Abbey-யில் ‘Poets Corner’ என்ற பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
சார்லஸ் டிக்கன்ஸின் 200-வது நினைவு தினம் உலக முழுவதும் கொண்டாடப்படுகிறது. 1812-ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி பிறந்த டிக்கன்ஸ் 1870-ஆம் ஆண்டு ஜூன் ஒன்பதாம் தேதி இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
டிக்கன்ஸின் வாழ்வும், எழுத்தும் ஆச்சரியமானது. அசாதரணமான எழுத்தாளர் என அவரை அழைக்கலாம். தான் வாழ்ந்த காலத்தின் ஆன்மாவுடன் டிக்கன்ஸ் சஞ்சரித்தார். அக்கால சூழலின் தலையும், வாலும், உள்ளும், புறமும் எல்லாம் டிக்கன்ஸிற்கு தெரியும். உலகம் முழுவதும் என்றும் நினைவுக்கூற தக்கவகையில் டிக்கன்ஸ் அக்காலக்கட்டத்தில் தனது வாசகர்களுக்காக எழுதினார்.
1830 களில் பத்திரிகையாளராக டிக்கன்ஸ் தனது வாழ்வை துவக்கினார். அக்காலக்கட்டத்தில் அவர் எழுதிய பிக்விக் பேப்பர்ஸ் என்ற முதல் நாவல் டிக்கன்ஸை பிரசித்தி பெற வைத்தது. பின்னர் வந்த தசாப்தங்களில் டிக்கன்ஸின் ஒவ்வொரு படைப்பையும் வாசகர்கள் தங்களது மூச்சை அடக்கி காத்திருந்து வாசித்தனர்.
Oliver Twist, David Copperfield, Nicholas Nickleby,The Old Curiosity Shop  என எத்தனையோ நாவல்களை அவர் வாசகர் உலகிற்கு அளித்தார். டிக்கன்ஸிற்கு பிறகு அவரைப் போன்ற எழுத்தாளர் உருவாகவில்லை எனலாம்.
முதலாளித்துவம் தனது கோரமுகத்தை வெளிப்படுத்திய காலக்கட்டத்தில் டிக்கன்ஸ் வாழ்ந்தார். எழுதினார். காலனியிசம் தனது வெற்றியை உலகமெங்கும் ஸ்தாபித்த காலக்கட்டம். அதன் பயங்கர அனுபவங்களை டிக்கன்ஸின் எழுத்தில் காணலாம். திறமைசாலியான அந்த எழுத்தாளனின் நினைவுகள் இனிமையானவை.
....தேவேந்திர இளைஞர் நல அமைப்பு 

 
Support : தேவேந்திர இளைஞர் நல அமைப்பு
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
powered by DYWA Youths